புதிய திருச்சபையின் திறப்பு விழா

வவுனியா, இலங்கை

அன்பான சகோதர,சகோதரிகளே! இயேசுக்கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

8C, பள்ளி வாசல் வீதி, பட்டக்காடு, வவுனியா, இலங்கை;
என்னும் இடத்தில் எமது Life Givig Grace International Ministry யினால் புதிய திருச்சபையின் திறப்பு விழா 8/01/ 2023 அன்று காலை 9:30 மணியளவில் தொடங்கி வைக்கப்பட்டது .

👉வேதாகமத்தில்
💎 1கொரிந்தியர் 12:12, 27ல் எப்படியெனில், சரீரம் ஒன்று அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.
💎நீங்களே! கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயங்களுமாயிருக்கிறீர்கள்.

இந்த ஜீவனுள்ள தேவ வார்த்தையின் வெளிப்பாடாக எமது LIFE GIVING GRACE INTERNATIONAL MINISTRY
இலங்கை, வவுனியாவில் முதற்கிளைச் சபையை 08.01.2023 அன்று ஆரம்பித்துள்ளது. இயேசுக்கிறிஸ்துவே! தலையாக இருக்கின்றார். நாங்கள் அவரோடு இணைக்கப்பட்ட சரீரத்தின் அவயவங்களாக இருக்கின்றோம். எமது சபை வவுனியாவில் ஆராதனைகளுடன் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. ஜீவனுள்ள வேத சத்தியத்தின் முலம் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளின் சாட்சிகள் பகிரப்பட்டது. தலைமை போதகர் மகேன் அவர்கள் பிரதான தேவ செய்தியை பகிர்ந்து கொண்டார்.
எமது சபை ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலம் தான், ஆனாலும்; தேவன் அநேக அற்புத, அதிசயங்கள் மூலம் தமது வசனத்தை எமது சபையில் உறுதி செய்து வருகிறார். உயிருள்ள சாட்சியாக 12 வருட தீராத வியாதியிலிருந்து விடுதலைபெற்று குடும்பத்துடன் ஊழியம் செய்யும் சகோதரியின் குடும்ப சாட்சியும், வியாதியிலிருந்து விடுதலையடைந்த சகோதரியின் சாட்சிகள் கூறப்பட்டது. இரு வாலிபர்கள் ஆவிக்குரிய வழி நடத்தலில் வழி நடத்தப்பட்டார்கள். GOOGLE MEET ல் வெளிநாட்டலிருந்து குறிப்பாக லண்டன், கனடா, அவுஸ்திரேலியா, குவைத், ஜேர்மன், போன்ற நாடுகளிலிருந்தும் ஆராதனையில் இணைந்து கொண்டு வாழ்த்துச் செய்திகளும் வழங்கியிருந்தார்கள். மதிய நேர உணவில் விசுவாசிகளும் கலந்து கொண்டு, பல புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்திருந்தனர்.

எமது தலைமைச் சபை ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலப்பகுதியில் கிளைச் சபையொன்று ஆரம்பிக்கப்பட்டது என்பது எங்களால் உண்டான காரியமல்ல; எல்லாம் ஆவியானவருடைய வழிநடத்தலால், பிதாவாகிய தேவனின் சித்தப்படி, கிறிஸ்து இயேசுவுக்குள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. 2022 ம் ஆண்டு ஜனவரி மாதமளவில் எமது “தேவ கிருபையின் சத்தியம்” ஜீவனைக் கொடுக்கின்ற எமது ஊழியத்தின் மூலம் உலகமெங்கும் வெளிப்டுத்தப்பட வேண்டுமென்று ஜெபத்துடன் நன்றி கூறியிருந்தோம். அந்த கிருபையின் செய்தி ஜீவனுள்ள விதை கொடுக்கின்ற கிளையாக இன்று பலனைத் தந்துள்ளது.

இலங்கையில் இருக்கும் எமது அன்பின் சகோதர சகோதரிகளே இந்த சபையில் நீங்களும் இணைந்து விடுதலையான, செழிப்பான, கிறிஸ்துவுக்குள் உள்ள மேன்மையான வாழ்க்கையை இலவசமாக சுதந்தரித்துக்கொள்ளுங்கள். ஆமென்🙏 அல்லேலூயா🙏

மேலதிக தொடர்புகளுக்கு.
Pastor Mahen.
Call or Chat on WhatsApp with ;
00 44 7958 326627

Translate »