னக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது.   (எசேக்கியல் 37:7 )

தீர்க்கதரிசனம் என்றால் தெய்வீக வெளிப்பாடுகள் மற்றும் ஆற்றல் வாய்ந்த வார்த்தைகளை பேசுவதும் ஜீவனுள்ளதும் ஜீவனைக்கொடுக்கும் வார்த்தைகளை பேசுவதுமாகும். 

தீர்க்கதரிசனம் என்பது வெறுமனே வார்த்தைகளை உரைப்பது மாத்திரம் அல்ல, அத்துடன் சரியான, சமயத்திற்கேற்ற ஆவியின் வார்த்தைகளை உரைப்பதாகும். “நான் எனக்கு கட்டளையிடப்பட்ட வார்த்தைகளையே தீர்க்கதரிசனமாக உரைத்தேன்” என்று எசேக்கியல் சொல்கிறார்.

 

அவர் தீர்க்கதரிசனம் உரைத்த போது பைபிள் தெளிவாக சொல்கிறது அங்கே எலும்புகள் சரியான எலும்புகளுடன் ஒன்றிடம் ஒன்று ஒரு இரைச்சலுடன் சேர்ந்தன. இது ஒரு முக்கியமான விடையம், ஏனெனில் ஒவ்வொரு எலும்பும் தனக்கான பிரத்தியேக, தனித்துவமான வார்த்தைக்கே இயங்குகிறது. அந்த எலும்புகள் தங்களுக்கேற்ற வார்த்தைகளை கேட்கும்பொழுது தாங்கள் எந்தெந்த  எலும்புடன் சேர வேண்டுமோ அவைகள் எந்த வித குழப்பமுமில்லாமல் சேரக்கூடிதாக இருந்தது.

 

 தேவன் வல்லமையை வார்த்தைகளுக்கூடாக வெளிப்படுத்துவதற்கு ஏற்றவிதமாக வார்த்தைகளை உருவாக்கியிருக்கிறார். ஆனாலும் நாம் சமயத்திற்கேற்ற சரியான வார்த்தையை பேச அறிந்திருக்க வேண்டும். இதுவே தேவ ஆவியானவரின் ஊழியமாக இருக்கிறது. அதனால்தான் ஆவியானவரோடு  அன்நியோன்யமான உறவைப்பேணுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவரே அந்த சமயத்திற்கேற்ற பொருத்தமான, தனித்துவமான வார்த்தையை அறிந்திருக்கிறார். நாம் பரிசுத்த ஆவியானவர் பேசுவதை கேட்பதற்கு கவனமாக செவிகொடுப்போமானால் அவருடைய வழி நடத்தலை பெற்றுக்கொள்வோம். அவரே எங்களுக்கு சரியானதைப் பேச சொல்லித்தருகிறார். அவர் உங்களுக்கு காட்சியாக காண்பிப்பார். ஆனால் நீங்கள் அவர் உங்களுடன் பேசியதாக பேச வேண்டும். அல்லாவிடில் அந்த தீர்க்கதரிசனம் வேலை செய்யாது. 

 

ஆவியானவரே எங்களை வழி நடத்துவாராக. எங்கே நீங்கள் பிரச்சனைகளை எதிர் நோக்குகிறீர்களோ மற்றும் மோசமான சவால்களுக்கு முகம் கொடுக்கிறீர்களோ அந்த வேளையில் நீங்கள் இவ்வாறு ஜெபம் பண்ணலாம், “பரிசுத்த ஆவியானவரே எனக்கு சரியாக ஜெபம் செய்ய உதவும். ஏனெனில் எதை ஜெபிக்கவேண்டும் என்று எனக்கு தெரியாமல் இருக்கிறது”. பின்பு அன்னிய பாஷையில் ஜெபம் பண்ணுங்கள். அன்னிய பாஷையிலே துதியையும் ஆராதனையையும் செய்யுங்கள். இதனை முழு பலத்தோடும் செய்யுங்கள். அதே வேளை உங்கள் சிந்தையை ஒருமுகப்படுத்தி உங்களை நெருக்குகிற அந்த பிரச்சனையை அணுகுங்கள்.

 

நீங்கள் அன்னிய பாஷையில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது அதி சீக்கிரத்தில் உங்களிடம் இருந்து தீர்க்கதரிசனம் வெளிப்படும். எசேக்கியல் கட்டளையிட்டது போலவே கட்டளையிடுங்கள். மற்றும் நீங்கள் சரியான சமயத்திற்கேற்ற வார்த்தையை (code) பேசுவீர்கள். இவ்வாறே உங்கள் வாழ்க்கையில் வேண்டிய மாற்றங்களை, உங்கள் பொருளாதாரத்தில், கையிட்டு செய்யும் வேலையில், வியாபாரத்தில், குடும்பத்தில் மற்றும் எந்தெந்த விடையங்களில் மாற்றம் தேவையோ சரியான, பொருத்தமான வார்த்தையை பேசுங்கள். இவற்றை ஆவியானவரிடம் இருந்து பெற்று அதையே பேசுங்கள். இவற்றை பேசும்பொழுது எந்த நம்பிக்கை இல்லாத சூழ் நிலையையும் நம்பிக்கை உள்ள சூழ்நிலையாக மாற்றக்கூடிய தேவனுடைய உருவாக்கும் வல்லமை உங்கள் வாயில் இருந்து உருவாகும் வார்த்தைகளுக்கூடாக கிரியை செய்கிறது.