வேதம் சொல்லுகிறது எபிரேயர் 4:12 இல் “ தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.”

தேவனுடைய வார்த்தையானது எனக்குள்ளேயும் என்னுடைய சரீரத்தின் எல்லா பகுதியிலும் என்னுடைய எலும்புகளுக்குள்ளும் வல்லமையாக வேலை செய்கிறது என்று அறிக்கை பண்ணுகிறேன். 

தேவனுடைய வார்த்தையை நான் எனக்குள்ளே பெற்றுக்கொள்ளும்பொழுது அது என்னுடைய ஆவி, ஆத்துமா, மற்றும் சரீரங்களுக்குள் ஊடறுத்து செல்கின்றது. இது என்னுடைய எல்லா கலங்களிலும் எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜைக்குள்ளும் ஊடுருவி உள்ளும் புறமும் என்னை சுத்திகரித்து புத்துயுயிர்ச்சி தருகிறது. 

இப்பொழுதே கிறிஸ்துவின் ஜீவனுள்ள ஆவியின் பிரமாணம் எனக்குள்ளேயே வேலை செய்கிறது. 

நித்திய ஜீவன் எனக்குள்ளேயே உலாவி, பயணித்து என்னை முழுமையாக எனக்குள்ளிருந்தே பெநான் எல்லாவற்றையும் மேற்கொண்டுவிட்டேன். 

நான் வெற்றி வீரன். கிறிஸ்து இயேசுவினால் பெலமடைந்து எல்லாவற்றையும் செய்துமுடிக்கும் திராணி உள்ளவனாய் இருக்கிறேன். 

கிறிஸ்துவை மரித்தோரில் இருந்து எழுப்பின உயிர்ப்பிக்கும் பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ளே நிரந்தரமாய் வாசம்பண்ணுகிறார். 

அவர் எனக்குள் இருந்து சாவுக்கேதுவான சரீரங்களை உயிரோடு எழுப்புகிறார். 

என்னுடைய சரீரத்தின் ஜீவன் இனிமேல் என்னுடைய இரத்தத்திலே தங்கி இருப்பதில்லை. 

ஏனென்றால் என்னுடைய ஜீவன் தேவனுடைய ஆவிக்குள்ளே இருக்கிறது என்று உலகத்திற்கு பகிரங்கமாக தெரியப்படுத்துகிறேன். 

என்னுடைய இரத்தத்திலே எந்த தொற்று நோய் வியாதிகள் பற்றிக்கொள்ள முடியாது. ஏனென்றால் தேவ ஆவியானவரே என்னுடைய மாமிச சரீரத்தில் ஜீவனாக இருக்கிறார். 

நான் இப்பொழுதே என்னுடைய வாழ்க்கையிலே முற்றிலும் ஜெயம் கொண்டவனாய் இருந்து வியாதிகள், பிசாசுக்கள், இருளின் வல்லமைகள் எல்லாவற்றையும் என் ஆளுகைக்குள் உட்படுத்தி  அவைகளுக்கு மேலாக இராஜரீகம் செய்கிறேன். 

நான் முற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டவன். அந்த ஆசீர்வாதத்திலே நடைபோடுகிறேன். 

நான்  தேவனுடைய வார்த்தைக்குள்ளே பயணிக்கிறேன். 

ஆனபடியினால் தேவனுடைய வார்த்தை எதனை பேசுகிறதோ அதுவே என் வழ்க்கையின் கனிகளாக இருக்கிறது. 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். என்னை நான் யாரென்று அறிந்து கொண்டேன். அல்லேலூயாலப்படுத்துகிறது.

எனக்குள்ளே இருக்கிறவர் இந்த உலகத்திலே இருக்கிறவனை காட்டிலும் மிகவும் பெரியவர். 

!!!