இயேசு கிறிஸ்து சொன்னார் “யோவான் 6:47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நீங்கள் ஒருபோதும் இரட்சிப்பைப் பெறவில்லை என்றால், உங்கள் இதயத்தில் இயேசு கிறிஸ்துவை  பெறவில்லையென்றால், கிறிஸ்துவின் இந்த புதிய வாழ்க்கையை ஒருபோதும் அனுபவிக்கவில்லை என்றால், இதுவே உங்கள் தருணம்

 இந்த இயேசு கிறிஸ்துவை எப்படி ஏற்றுக்கொள்வது?

வேதம் சொல்கிறது 

ரோமர்10 அதிகாரம் வசனம் 9,10. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

நீங்கள் கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறக்க விரும்புகிறீர்களா? கீழே உள்ள இரட்சிப்பின் ஜெபத்தை சொல்லுங்கள்

கர்த்தராகிய ஆண்டவரே, ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நான் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். அவர் எனக்காக மரித்தார்  என்றும் தேவன்  அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்றும் நான் விசுவாசிக்கிறேன். இயேசு கிறிஸ்து இன்றும் இன்று உயிருடன் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இன்று முதல் இயேசு கிறிஸ்து என் வாழ்வின் ஆண்டவர் என்பதை என் வாயினால்  ஒப்புக்கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின்  மூலமாகவும் அவருடைய நாமத்திலும்  எனக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் இப்பொழுதே மறுபடியும் பிறந்துள்ளேன். ஆண்டவரே, என் ஆத்துமாவை  காப்பாற்றியதற்கு நன்றி! நான் இப்போது பிதாவாகிய தேவனின் பிள்ளை. அல்லேலூயா!”

ரோமர் 6:22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.

நீங்கள் தொடர்ந்து இந்த கிறிஸ்தவத்தை குறித்து கற்றுக்கொள்ள வேண்டுமா? எங்கள் கலந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்கள் அறிய எமது இணையத்தளத்தை பார்வையிடுங்கள். 

Translate »